Wednesday, 5 March 2014

மணமகனே மருமகனே வா வா!

மணமகனே மருமகனே வா வா-உன்
இடது காலை உள்ளே வைத்து வா வா!
வளம் விரும்பும் திருமகனே வா வா!—உன்
பிறந்த வீட்டை மறந்து இங்கே வா வா!
(மணமகனே)

தனமிருக்கும் பணமிருக்கும் உங்கள் வீட்டினில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் எங்கள் வீட்டினில்.
நாஉரையும் நாடகமும் உங்கள் வீட்டினில்—மெய்
நாநயமும் நேர்முகமும் எங்கள் வீட்டினில்
(மணமகனே)

கற்ற பாடம் உற்ற நடை வீடு எங்கள் வீடு
மற்றவரை கணம்மதித்து வாழும் எங்கள் வீடு
நல்லவர்கள் நண்பராக தேடும் இந்த வீடு.
பச்சமுடன் பாச மணம் வீசும் இந்த வீடு.
(மணமகனே)

ஆபரணம் காவரணும் கொண்டிருக்காது.—இங்கு
வாழவரும் மாப்பிளைக்கும் குறையிருக்காது  
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—என்றும்
கண்ணாலும் காண்பதற்கும் ஒளிவிருக்காது
(மணமகனே)

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.இனி மணமகனுக்குத்தான் பெண் வீடு வாழவந்த வீடு,பெண்ணுக்கு பிறந்தவீடே சொந்தவீடு.பெண்ணுக்கு புகுந்த வீட்டில் புகுந்த வீடு பாதுகாப்பு இல்லை என்பதால் ஆண் வாரிசுரிமை பென்வாரிசுரிமை எனப்புதியமாற்றம் அமுலாகிறது.இதுதான் பெண்ணுரிமை மீட்பு புதிய சட்டம்.ஆகவே பாட்டை இனி இப்படித்தான் மாற்றிப்பாட வேண்டும்.

பெண்ணடிமை ஒழிப்பும் பெண்ணுரிமை மீட்பும் /////கட்டுரை ///படிக்க!

No comments:

Post a Comment